6 மணி.. 6வது மலை... வெள்ளியங்கிரி மலையேறும்போது இளைஞர் பலி - இப்படியெல்லாம் நடக்குமா..?

x

கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற 22 வயது இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு 6-ஆவது மலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிக குளிர் காரணமாக தமிழ்ச்செல்வன் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் மூலம், நண்பர்கள் அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்