வெளுத்து வாங்கும் மழை - கோடை காலத்தில் குளுகுளுவென மாறிய தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால், வெப்பம் தணிந்தது.
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் ஒருமணி  நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால், வெப்பம் தணிந்தது. நேற்று சென்னையில் பகல் பொழுதில் பெரிய அளவில் வெயில் இன்றி மந்தமாக இருந்தது. இதனிடையே, பின்னிரவில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால், சற்று வெப்பம் தணிந்தது. இதேபோல், காலை முதல் கடும் வெயில் மற்றும் அனல் காற்றால், குடியாத்தம் பகுதி மக்கள், பெரும் அவதி அடைந்தனர். எனினும், இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக் காற்றுடன் இரவில் மழை கொட்டியது. மேல்ஆலத்தூர், நெல்லூர்பேட்டை, காந்திநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, சற்று இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்