"மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நான் நிறைவேற்றித் தருவேன்.." தாம்பரம் 49வது வார்டு திமுக வேட்பாளர் வாக்குறுதி

தாம்பரம் 49வது வார்டு திமுக வேட்பாளர் காமராஜ் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம்
x
தாம்பரம் மாநகராட்சியின் 49வது வார்டு திமுக வேட்பாளர் காமராஜ், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தாம்பரத்தின், முக்கிய பகுதியான 49-வது வார்டில் திமுக சார்பில் காமராஜ் களம் காண்கிறார். ஏற்கனவே, தாம்பரம் நகர் மன்ற துணைத் தலைவராக பணியாற்றியுள்ள இவர், தொண்டர்களுடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிப்பின்போது, அப்பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவேன் என திமுக வேட்பாளர் காமராஜ் வாக்குறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்