நீயா.. நானா.. பார்க்கலாமா..!! தேர்தலில் களமிறங்கும் கணவன் மனைவி

திருவள்ளூர் மாவட்ட நகராட்சி தேர்தலில் அடுத்த வார்டுகளில் கணவன் மனைவியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மருமகள்கள் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
x
திருவள்ளூர் மாவட்ட நகராட்சி தேர்தலில் அடுத்த வார்டுகளில் கணவன் மனைவியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மருமகள்கள் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் ஆரணி பேரூராட்சியின் 11ஆவது வார்டுக்கு கணவர் குணபூபதியும், 12 ஆவது வார்டுக்கு அவரது மனைவி சந்தானலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதேபோல் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் 2வது வார்டுக்கு மனைவி பத்மாவதியும், 3 ஆவது வார்டுக்கு அவரது கணவர் முனுசாமியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.மேலும், மீஞ்சூர் பேரூராட்சியின் 10ஆவது மற்றும் 11 ஆவது வார்டில் போட்டியிட முன்னாள் திமுக எம்.எல்.ஏக்களின் மருமகள்களும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்