"எத்தனை கட்சிகள் எதிர்த்து போட்டியிட்டாலும் அவற்றை தகர்த்து எறிந்து வெற்றி பெறுவேன்" - சுயேட்சையாகப் போட்டியிடும் திருநங்கை நம்பிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட திருநங்கை ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட திருநங்கை ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கோவிந்தபுரம் 20 வது வார்டு பகுதியில் திருநங்கை ஈஸ்வரி சுயேட்சையாக போட்டியிட நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மக்கள் ஆதரவு தனக்கு முழுமையாக உள்ளதால் எத்தனை கட்சிகள் தன்னை எதிர்த்து போட்டியிட்டாலும் அவற்றை தகர்த்து எறிந்து வெற்றி பெறுவேன் என்று ஈஸ்வரி நம்பிக்கையோடு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்