மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் - அனுமதிக்க மறுத்ததால் தேமுதிகவினர் சாலை மறியல்

திருச்சியில் மாட்டுவண்டியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த தேமுதிக வேட்பாளரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
x
திருச்சியில் மாட்டுவண்டியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த தேமுதிக வேட்பாளரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சியில் 54, 55, மற்றும் 57 வது வார்டுகளில் போட்டியிடும் வெங்கடேசன், அலெக்ஸ் மற்றும் செல்வம் ஆகிய 3 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இரு சக்கர வாகனங்கள் புடைசூழ மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் அவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த போது போலீசார் மாட்டுவண்டியை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாட்டு வண்டியுடன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டடுது.


Next Story

மேலும் செய்திகள்