நெல்லை மாநகராட்சியில் காங். தனித்து போட்டி?
நெல்லை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து மாநில தலைமையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து மாநில தலைமையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். நெல்லை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் தனித்து போட்டியிட முடிவு செய்து மாநில தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளனர். தனித்து போட்டியிட மாநில தலைமை அனுமதி வழங்கவில்லையென்றால் 3 இடங்களை திமுகவிடமே திருப்பி கொடுத்துவிட்டு, திமுகவினருக்கு தேர்தல் பணி செய்ய தயார் நிலையில் இருப்பதாக நெல்லை காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story