"சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்" - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சென்னை - சேலம் 8 வழிச்சாலை குறித்து தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
x
சென்னை - சேலம் 8 வழிச்சாலை குறித்து தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். எனவே, அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமே அச்சத்தைப் போக்க முடியும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்