"தஞ்சை மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" - குஷ்பு, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார்.
x
அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என,  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார். அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, மாணவியின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என, வலியுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்