முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.1.32 லட்சம் வசூலித்த போலீசார்

முக கவசம் அணியாத 660 பேருக்கு அபராதம் ஒரே நாளில் ரூ.1,32,000 வசூல் செய்த போலீசார்
x
ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கின் போது  தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் தலா 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முக கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்