10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்?

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
x
கொரோனா 3வது அலை தீவிரமாகி வருவதால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்துவது குறித்து கல்வித் துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் எடுக்க கல்வித் துறை பரிசீலித்து வருகிறது. அதன்படி, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வழக்கம் போல் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்