முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார் - ஜன. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

நடிகை கொடுத்த புகாரில், ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்  - ஜன. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
x
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, நடிகை சாந்தினி கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு,  சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. வழக்கு தொடர்பாக,  மணிகண்டனுக்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 341 பக்க குற்றபத்திரிகையை, அடையாறு அனைத்து மகளிர் போலீசார் தாக்கல்  செய்தனர். இந்த வழக்கு நீதிபதி மோகனாம்பாள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்