12 மணி நேரத்திற்கு மேலாக பெய்யும் மழை - முக்கிய அணைகளில் தண்ணீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
12 மணி நேரத்திற்கு மேலாக பெய்யும் மழை - முக்கிய அணைகளில் தண்ணீர் திறப்பு
x
அதங்கோடு, மங்காடு, பணமுகம், நடுவரம்பன்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடைவெளி இன்றி சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக கனமழை நீடிக்கிறது. தொடர் மழை காரணமாக முக்கிய அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மங்காடு, பணமுகம், முன்சிறை, பள்ளிக்கல், வைக்கல்லூர், பருத்திக்கடவு உள்ளிட்ட பகுதியில் குடியிருப்பு, விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. பிரதான சாலைகள் நீரில் மூழ்கியதால் தற்காலிகமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர் கனமழை, வெள்ளத்தால் கிள்ளியூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்