உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் - "முதலமைச்சர் ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும்" : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்
உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
x
உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட அவர் ,  பின்னர் பேசிய போது  ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக  கூட்டணி பெரும்பான்மையான வெற்றி பெற்றது  மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை   செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்