"மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது" - உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல்
மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு 50 சதவீத சுங்ககட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரவாயல்-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதனால் இனி 100 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது.
Next Story