கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு - மீன்வெட்டும் கத்தியால் கொலை செய்த கணவன்

தருமபுரி அருகே குடும்ப தகராறில் மீன்வெட்டும் கத்தியை வைத்து மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு - மீன்வெட்டும் கத்தியால் கொலை செய்த கணவன்
x
தருமபுரி அருகே குடும்ப தகராறில் மீன்வெட்டும் கத்தியை வைத்து மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பென்னாகரம், ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெரினா. இவரின் கணவர் கலீல். இருவரும் ஒகேனக்கலில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 பிள்ளைகள். ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பை நடத்தி வந்த இவர்களுக்கு சில ஆண்டுகளாக வருமானம் இல்லாமல் போகவே, அதன் காரணமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் வந்த கலீல், தன் மனைவி ஜெரினாவை மீன்வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்