இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை - விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு போதைமருந்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை - விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு போதைமருந்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அட்டப்பன்வயல் பகுதிகளில் தொடர்ந்து போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனையடுத்து அவர்களை சோதனையிட்டதில் போதைப்பொருட்கள், மருந்துகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்