திமுக, அதிமுகவினர் இடையே மோதல் - கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

திமுக, அதிமுகவினர் இடையே மோதல் - கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு
x
திமுக, அதிமுகவினர் இடையே மோதல் - கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கிராம சபை கூட்டத்தில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம், சித்தூர் நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என புகார் தெரிவித்தார். திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உஷாவின் கணவர் ஸ்ரீதர், சிவக்குமாரை பிடித்து தள்ளியதால், மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்