காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
x
காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு  

மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.காந்தி ஜெயந்தியை ஒட்டி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர பிற இடங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரை பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அமைச்சர்கள் பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அரசின் திட்டங்கள், கிராம வளர்ச்சி குறித்து விவாதம் செய்யப்பட்டது. பாப்பாபட்டி ஊராட்சியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர், பேருந்து,  கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கிராம சபை கூட்டத்தில் முதல்வரிடம்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்