செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போன மகன் - தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு

மதுரையில் செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போன மகனை தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.
செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போன மகன் - தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு
x
மதுரை பழைய விளாங்குடி முத்துமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் பிரான்சிஸ் எபிநேசர். 18 வயதான இவர், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவரின் பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் பிரான்சிஸ் தன் தாய் முத்து மாரியுடன் வசித்து வந்தார். இதனிடையே படிப்பில் ஆர்வம் காட்டாத பிரான்சிஸ், செல்போனில் அதிக நேரம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தாய் முத்துமாரி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பிரான்சிஸ், தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்