அரசு டாஸ்மாக் கடையில் ரூ.52000 கொள்ளை - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை
மதுரை செக்காணூரணி அருகே டாஸ்மாக் கடையில், கத்தியை காட்டி மிரட்டி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை செக்காணூரணி அருகே டாஸ்மாக் கடையில், கத்தியை காட்டி மிரட்டி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிண்ணிமங்கலத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்குவது போல நடித்து கடையின் உள்ளே மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் பட்டா கத்தியை காட்டி விற்பனையாளரை மிரட்டி, கடையிலிருந்த 52 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Next Story