பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு
x
பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2001 - 2002ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3வது பருவம் முதலும், 2002 - 2003ஆம் ஆண்டில் முதல் பருவத்தில் சேர்ந்த மாணவர்களும், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத, சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத, வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தேர்வு அட்டவணை, தேர்வு முறை, மையம் ஆகியவை அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.





Next Story

மேலும் செய்திகள்