"யானையை தனிநபர்கள் வளர்க்க கூடாது" - நீதிமன்றம்

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானையை தனிநபர்கள் வளர்க்க கூடாது - நீதிமன்றம்
x
கோவில் யானைகள் பராமரிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன், அவற்றின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, ஆதிகேசவலு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, கோவில்களில் 32 யானைகள், தனி நபரிடம் 31 யானைகள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகள் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்கோரி அரசுத் தரப்பில் கோரப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கடந்த 5 ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்