தமிழகத்தில் 10 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில், 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் 10 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்
x
ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ஜெயந்த் முரளி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய்குமார் சிங், ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக மகேந்திர குமார் ரத்தோட் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கார்த்திகேயன் திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னையில் உள்ள காவல்துறை பயிற்சி கல்லூரி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சி சரக டிஐஜியாக சரவண சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.சிபிசிஐடி பிரிவின் எஸ்.பியாக இருந்த மாடசாமி, சேலம் வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்