கார் மோதி விபத்து - இன்ஜினியர் பலி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி பகுதியில் சொகுசு கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
x
சென்னையை அடுத்த  தாம்பரம் கடப்பேரி பகுதியில் சொகுசு கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் பணியாற்றி வந்த அர்ஜூன், வேலை முடிந்து அச்சிறுப்பாக்கம் செல்ல பேருந்து நிலையத்துக்கு வந்தபோது, அவர் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ஜூன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்