"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நீர்நிலையை அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் இரண்டு பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், சவுமேந்திரர் ஆகியோர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் காவல்நிலையம் கட்டப்பட்ட இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர் நிலை எனவும்  இதேபோல் தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும், அதனை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்