அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
x
அண்ணா பல்கலை.க்கு உதயநிதி நியமனம் - சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு 

அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவின் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து சபாநாயகர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ஆட்சிமன்ற குழு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெற்றியழகன், வி.ஜி.ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் மூர்த்தி, செந்தில் குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உதயநிதி ஸ்டாலினையும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச்செல்வனையும் நியமனம் செய்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.கல்வி இயல் பல்கலைக்கழகத்திற்கு ஜவாஹிருல்லாவும், வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை பாரதியார் பல்கலைக் கழககத்திற்கு எம்எல்ஏக்கள் ஈஸ்வரன் மற்றும் கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு மணிக்கண்ணனும், ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்திற்கு நாகை மாலியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ் பல்கலைகழகத்திற்கு ஜி.கேஜி.நீலமேகம் மற்றும் பிராபகரனும், திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு நந்தகுமார் மற்றும் கண்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டு காலங்களாக இருக்கும். நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின்   சட்டமன்ற பதவி இல்லையென்றால் , பல்கலைக்கழக  பதவி காலமும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்