கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்

கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்
கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்
x
கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் தாயுடன் சேர்ந்து மகன் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் நகைகள் வைக்க பயன்படுத்தப்பட்டும் சிறிய பிளாஸ்டிக் பெட்டிகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக நகை விற்பனை சரிவர நடைபெறாத நிலையில் சுரேஷ்குமாரின் தொழிலும் மந்தமடைய தொடங்கியுள்ளது. முதலீட்டிற்காக கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் சுரேஷ்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனைவி மற்றும் இரு மகள்கள் வெளியே சென்ற நிலையில் 70 வயது தாய்க்கு சயனைடை சாப்பிட கொடுத்து விட்டு, தானும் அதனை உண்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டிற்கு திரும்பிய மனைவி, தனது கணவர் மற்றும் மாமியார் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கடன்தொல்லையால் சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்