நட்சத்திர ஆமைகள் தாய்லாந்திற்கு கடத்தல்: ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆமைகள் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் கடத்தப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திர ஆமைகள் தாய்லாந்திற்கு கடத்தல்: ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆமைகள் பறிமுதல்
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம்  தாய்லாந்து நாட்டிற்கு நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 15 பார்சல்களில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2ஆயித்து 227 நட்சத்திர ஆமைகள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் ஆமைகளை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆமைகள் கடத்தலில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து  இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கு சிபிஐ  விசாரணைக்கு பரிந்துரை செய்வது நாட்டிலேயே இதுவே முதல் முறை என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்