போலி ஆதார் அட்டை பறிமுதல்- வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் ரோடு, வேலாயுதம் பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் சட்ட விரோதமாக, வங்கசேதத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
போலி ஆதார் அட்டை பறிமுதல்- வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது
x
இதில், வங்கதேசத்தை சேர்ந்த ஜாகீர் உசேன், ஆலாமின் உள்ளிட்ட 8 பேர்  பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக அங்கு தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்த போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்