தூத்துக்குடி எஸ்.பி. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "மணல் கடத்தல் வழக்கில் சாயர்புரம் போலீசார் என் மீது கடந்த ஜூலை 22ல் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்
x
* 2019ல் மணல் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஜூலையில் தான் கைது செய்யப்பட்டுள்ளார். 

* இதே மனுதாரர் பட்டா நிலத்தில் இருந்து 1,500 யூனிட் மணல் கடத்திய புகாரை மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* தூத்துக்குடி எஸ்பி முறையாக கண்காணிக்க தவறிவிட்டார். எனவே, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. 

* விஏஓ மற்றும் வருவாய்த்துறையினர் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. எனவே, இதுதொடர்பாக கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் முத்துக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்


Next Story

மேலும் செய்திகள்