ஊட்டியில் படகு சவாரி கட்டணங்கள் உயர்வு - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரிக்கான கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
x
ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரிக்கான கட்டணங்கள் உயர்ந்துள்ளது. அதன்படி, 2 நபர்கள் பயணிக்கும் மிதி படகிற்கு 250 ரூபாயும், 4 நபர்கள் பயணிக்கும் மிதிபடகிற்கு 350 ரூபாயாகவும் விரை விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளது. அதேபோல், 4 நபர்களுக்கான துடுப்பு படகில் பயணிக்க 400 ரூபாயும், 6 நபர்களுக்கான துடுப்பு படகில் பயணிக்க 450 ரூபாயும் வசூலிக்கப்டுகிறது.

மோட்டார் படகில் 8 நபர்களுக்கு  பயணிக்க 800 ரூபாயும், 10 நபர்களுக்கு 1000 ரூபாயும், 15 நபர்களுக்கு 1400 ரூபாயும்,  விலை நிர்ணயம் செய்யப்பட்டள்ளது. 
மேலும் வரிசையில் நின்று படகு சவாரி செய்யவதை தவிர்கவும், உடனடியாக படகு சவாரி செய்யவும், எக்ஸ்பிரஸ் கட்டணம்  என 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

அத்துடன்,  படகு சவரிக்கான கட்டணங்கள் அனைத்து வார இறுதி நாட்களில், 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை  கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்