"இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்"- மத்திய அரசுக்கு உத்தரவு

மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய அரசு, தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிபதிகள் உத்தரவை வெளியிட்டனர்.அந்த உத்தரவில், இந்தியாவில் ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசும் பதில் அளிக்க வேண்டும் என்றும்,இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் விதியை மீறும் எண்ணமில்லை என்று மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டாலும்,மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





Next Story

மேலும் செய்திகள்