5 பெரு நகரங்களில் 2வது தவணை தடுப்பூசி செலுத்தியதில் சென்னை முதலிடம்

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவில் உள்ள 5 பெரு நகரங்களில் சென்னை மாநகரம் முதலிடம் பெற்றுள்ளது.
x
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவில் உள்ள 5 பெரு நகரங்களில் சென்னை மாநகரம் முதலிடம் பெற்றுள்ளது. சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இதில் இந்தியாவில் உள்ள ஐந்து பெரிய நகரங்களில் சென்னையில் மட்டுமே அதிகமானோருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.சென்னையில் 11 சதவீதம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பெங்களூருவில் 10 சதவீதம் பேரும், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தலா 7 சதவீதம் பேரும்,  ஐதராபாத்தில் 5 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு  அதிகபட்சமாக பெங்களூருவில் 64 சதவீதம் பேருக்கும்,  சென்னையில் 43 சதவீதம் பேருக்கும், ஹைதராபாத்தில் 37 சதவீதம் பேருக்கும், டெல்லியில் 33 சதவீதம் பேருக்கும், மும்பையில் 32 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில் 45 வயதுக்கு மேற்பட்டோரில் பெங்களூருவில் 91 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 85 சதவீதம் பேருக்கும்,மும்பையில் 70 சதவீதம் பேருக்கும்,  டெல்லியில் 59 சதவீதம் பேருக்கும்,  ஹைதராபாத்தில் 48 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்