"செந்தில் பாலாஜிக்கு விலக்கு" -உயர் நீதிமன்றம்
கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை, எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்நிலையில், வரும்15ம் தேதி நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, புகார்தாரர் தரப்பில் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.அதே சமயத்தில், மனுதாரர் தரப்பில், செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக நிர்பந்திக்கப்படுவதால், அமைச்சர் பணியை மேற்கொள்ள இயலவில்லை எனக் கூறி, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜூலை 30 வரை வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
Next Story