மீனவர் வலையில் சிக்கிய திருக்கை மீன்கள் - சங்கு வாயன் திருக்கை விற்பனை விறு விறு
பாம்பன் பகுதியில் இருந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் திருக்கை மீன்கள் கிடைத்துள்ளது
.அதில் ஒரு படகில் மட்டும் சுமார் 500 கிலோ சங்கு வாயன் திருக்கை கிடைத்துள்ளது மேலும் பல மீனவர்களுக்கு டன் கணக்கில் புள்ளி திருக்கை கிடைத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் 50 கிலோவுக்கு மேல் எடையுள்ள வெள்ளை நிறம் கொண்ட முள் திருக்கை கிடைத்த நிலையில் அந்த திருக்கை மீனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்,.மேலும் 100 கிலோ எடைக்கு மேல் திருக்கை ஒன்றும் வலையில் சிக்கிய நிலையில் மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து ஏலம் விட்டனர்
Next Story