போலீசாரின் புதிய முயற்சி - மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்ட காவல்துறையினர், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊரடங்கின் போது நடந்த கஞ்சா, மது கடத்தல், சீட்டு, சேவல் சண்டை, குட்கா பதுக்கல் போன்ற அனைத்து குற்றச் சம்பங்களையும் மீம்ஸ் போட்டு போலீசார் சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு, ஹெல்மெட் விழிப்புணர்வு உள்ளிட்ட அனைத்திற்கும் போலீசார் மீம்ஸ் போட்டு வருகின்றனர்,. போலீசாரின் மீம்ஸ் திருப்பூர் மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story