கீழடியில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கீழடியில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கீழடியில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
x
கீழடியில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர் குழுவினர் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கீழடியில் அகழ் வைப்பகத்தின் கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு எ.வ.வேலு, பெரிய கருப்பன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்