ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு டெபாசிட்.. "கலர் ஜெராக்ஸ் எடுத்து டெபாசிட் செய்தோம்"

புதுக்கோட்டை அருகே ஏடிஎம் மிஷினில் 60 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு டெபாசிட் செய்த விவகாரத்தில், 2 பேர் கைது
x
ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு டெபாசிட்.. "கலர் ஜெராக்ஸ் எடுத்து டெபாசிட் செய்தோம்" 



புதுக்கோட்டை அருகே ஏடிஎம் மிஷினில் 60 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு டெபாசிட் செய்த விவகாரத்தில், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அறந்தாங்கியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளையில் ரேவதி என்பவரின் வங்கிக் கணக்கில், 60 ஆயிரம் ரூபாய்  ஏடிஎம் டெபாசிட் மிஷினில் செலுத்தப்பட்டது. டெபாசிட் மெஷின் உள்ள பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்து சோதனை செய்தபோது, அதில் ரேவதி கணக்கில் செலுத்தப்பட்ட 60 ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் நோட்டு, கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ரேவதி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். சரவணனின் நண்பர் ரவிச்சந்திரன் அறிவுரையின்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, 2 ஆயிரம் ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுத்து வங்கியில் செலுத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்