சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு.. சிறையில் இருந்த போது பாதிப்பு என தகவல்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
x
சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு.. சிறையில் இருந்த போது பாதிப்பு என தகவல்  

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு சிறையில் இருந்த அவருக்கு திடீரென பாதிப்பு ஏற்படவே, உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக அவரின் உடல் நிலை குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று மாரடைப்பு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்