15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
x
இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கோபால் சுந்தரராஜும் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக  சந்திரகலாவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகேஸ்வரி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலாளராகவும், சென்னை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சீத்தாலட்சுமி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்