கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் - அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்
தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த வங்கி பெண் ஊழியர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த வங்கி பெண் ஊழியர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பட்டுக்கோட்டை அருகே உள்ள காசாங்காடு கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் வேலை பார்த்து வந்த செந்தில் அரசி என்ற பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக வீட்டு தனிமையிலும் இருந்துள்ளார். இதனிடையே திடீரென அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் அவர் சடலமாக கிடந்தார். பின்னர் இவரின் உடலை மீட்ட தமுமுகவினர் உரிய விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தனர்.
Next Story