நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
x
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது மழை பொழிவு இல்லாத‌தால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 170 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணியில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் 96 புள்ளி 75 அடியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்