17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைகிறது - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
x
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து உள்ளதாக தெரிவித்தார். கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்