போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவை - 6 பேருக்கான காசோலை வழங்கினார் முதல்வர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான, ஓய்வூதிய நிலுவைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வுபெற்ற 2 ஆயிரத்து 457 போக்குவரத்து ஊழியர்களுக்கு, வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையான 497 கோடியே 32 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடையாளமாக, 6 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காசோலைகளை வழங்கினார்.
Next Story