56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி - சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 39 பேருக்கும், பிற மாவட்டங்களை சேர்ந்த 17 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 39 பேருக்கும், பிற மாவட்டங்களை சேர்ந்த 17 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 முதல் 27-ஆம் தேதி வரை 42 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 31 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், தனி வார்டு அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், பொதுநலம் மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Next Story