நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - விதிகளை மதிக்காத திருப்பூர் வாசிகள்

திருப்பூரில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.
x
திருப்பூரில் கொரோனா 2ஆம் அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், ஊரடங்கு விதிகளை மதிக்காமல், பொதுமக்கள் வீதிகளில் நடமாடி வருகின்றனர். நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நடை பயிற்சி மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழக  அரசின் கட்டுபாடுகளையும், விதிகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பதால், திருப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் திருப்பூர் 3ஆம் இடத்தில் உள்ளது. ஊரடங்கை மதித்து வீடுகளில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்