பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர், இயக்குனர் ஆஜர்

பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவரிடமும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர், இயக்குனர் ஆஜர்
x
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர், இயக்குனர் ஆஜர்

பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவரிடமும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் இயக்குனர் ஷீலா ராஜேந்திரன் ஆகிய இருவரும் விசாரணைக்காக அசோக் நகர் காவல் நிலையத்தில் நேரடியாக ஆஜரானார்கள். தியாகராயநகர் துணை ஆணையர் ஹரிகிரன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதன் பின்னர் அசோக் நகர் காவல்நிலைய உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் 28 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி உள்ளதால் அவர் மீது கடந்த காலகட்டத்தில் புகார்கள் ஏதேனும் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட மாணவிகள் பற்றிய விவரங்களையும் இருவரிடமும் எழுத்துப்பூர்வமாக போலீசார் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்