"தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
x
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் சூறைகாற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

*  ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்,  திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. 

*  உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், 

* 5 கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

* மேலும், அந்தமானை ஒட்டிய வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்