தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 17 பேருக்கு அரசு பணி நியமன ஆணை - பணி ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, காயம் அடைந்த 17 பேருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி நியமன உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
x
கொரோனா தடுப்பு பணி குறித்து 2-வது நாளாக மதுரையில் இன்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் 2018 ஆம் ஆண்டில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு பணி நியமன ஆணை பெற்றவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் சிறிது நேரம் உரையாடினார். திமுக எம்.பி கனிமொழி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்